Sunday, August 24, 2014

ஆயா வடை சுட்ட கதை


ரைட். நிறையப் பேர் அஞ்சான் பாதிப்பில் இந்தப் படத்தைப் பார்த்ததால் இது பெட்டராகத் தெரிந்ததாகக் கூறக் கேள்வி. நான் அஞ்சான் பார்க்கவில்லை ( சிக்க மாட்டோம்ல ). ஸோ அஞ்சான் ( எத்தனை அஞ்சான்யா?) எபக்ட் இல்லாமல் பார்த்த இந்தப் படம் எப்படி இருக்கிறதென்று நான் சொல்கிறேன்.

12B  படம் வந்த புதிதில் ஒரு வதந்தி காற்றில் உலவிற்று. வித்தியாசமான கதை பண்ணிய ஜீவாவுக்கு கடைசியாக படத்தை எப்படி முடிப்பதென்று தெரியவில்லையாம். கடைசியில் முடிவின் முடிச்சை பார்த்தி தான் கொடுத்து முடித்து வைத்தாராம் ( மறுபடியும் எத்தனை முடிய்யா?)

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஸோ அண்ட் ஸோ பழைய மொழி போல் ஜீவாவுக்கு க்ளைமேக்ஸ் பிடித்துக் கொடுத்த பார்த்திக்கே இந்தப் படத்தில் பிரச்னை. ஒரே வித்யாசம், இவர் க்ளைமாக்ஸை கச்சிதமாகப் பிடித்து விட்டார். முதல் பாதியும் பட்டாசு. இடைப்பட்ட ஒரு மணி நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்னவோ எழுதியிருக்கிறார்.

வழக்கமாக இவர் படங்களில் இவர் சிந்தனையில் உதித்த துணுக்குகளையும் கருத்துகளையும் துருத்திக் கொண்டு தெரியாமல் அழகான தோரணமாகக் கட்டி விடுவார் ( இவன் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் வசன கருத்துக்கள் திருஷ்டி பரிகாரம். என்னா அடி...... பச்ச குதிர, வித்தகனெல்லாம் நல்ல வேளை நான் பார்க்கவில்லை )

இந்தப் படத்தில் தோரணமாகக் கட்டியவை எல்லாமே  கொஞ்சம் தரமான துணுக்குகள். ஆனால் அதை முதல் பாதி முடிகிற வரை தான் இழுக்க முடிந்திருக்கிறது பாவம். ( இன்னும் ஒரு வருடம் கழித்து இந்தப் படம் எடுத்திருந்தால் ரெண்டாவது பாதிக்கும் துணுக்குகள் சேர்ந்திருக்கும் )

In a nutshell

முதல் பாதி – வாஹ்.....

ரெண்டாம் பாதி – ஹாவ்வ்வ்வ்........( கொட்டாவி தாங்க )
 


No comments:

Post a Comment